நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ஜெயிலர். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். அனிரூத் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சென்னையிலும் ஜெயில் அரங்கு அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கினர்.ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் முடித்து விட்டார். ரஜினி நடிக்க வேண்டிய அனைத்து காட்சிகளும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. தற்போது டப்பிங், ரீ ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் தொடங்கி உள்ளன. விரைவில் மொத்த படமும் முடிவடைய உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தை செப்டம்பர் மாதத்தில் வரும் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது
விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆகும் ஜெயிலர்?.. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
