விவசாயிகளுக்கு வாட்ஸ் ஆப் குழு..

விவசாயிகளுக்கு வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் 2023- 2024 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் நேற்றைய தினம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனால் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்றைய தினம் வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.தமிழக சட்டசபையில் இரண்டாவது முறையாக வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அமைச்சர் பேசியதாவது: 2,504 கிராமங்களில் ரூ.230 கோடி நிதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *