தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 23 கோடி ரூபாய்
மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், எவர்வின்
பள்ளி விளையாட்டுத் திடலில் ரமலான் பெருநாளை முன்னிட்டு 2000 இஸ்லாமிய
குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம் காலனி 27வது
தெருவில் உள்ள சென்னை ஆரம்பப் பள்ளிக்கு பெருநகர சென்னை மாநகராட்சி
மேயர் நிதியிலிருந்து 84 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாம் தளம் கட்டும் பணி;
ஜி.கே.எம். காலனி 25-வது தெருவில் பெருநகர சென்னை மாநகராட்சி மூலதன
நிதியிலிருந்து மழையினால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் பகுதியில் 17 தெருக்களுக்கு 5
சிப்பங்களாக 17 கோடியே 83 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய மழைநீர்
வடிகால்வாய் அமைக்கும் பணி;
ஜி.கே.எம் காலனி 12வது தெருவில் அமைந்துள்ள பழைய பெருநகர சென்னை
மாநகராட்சி ஆரம்பப் பள்ளியை இடித்துவிட்டு சிங்கார சென்னை 2.0 நிதியின் மூலம்
2.43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை தளம் மற்றும் முதல் தளம் கட்டும் பணி;
பெருநகர சென்னை மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில்
திரு. பி. வில்சன் அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு
நிதியிலிருந்து 1.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாம் தளம் மற்றும் பள்ளியை
மேம்படுத்தும் பணி;
பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி
மேல்நிலை பள்ளி, திருவீதியம்மன் கோயில் தெருவில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்
பள்ளி, கே.சி கார்டன் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, சோமையா
தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, ரங்கசாய் தெருவில் உள்ள
மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் கபிலர் தெருவில் உள்ள மாநகராட்சி
நடுநிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் 10 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பு
அமைப்புகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறைகள் (Smart Class) அமைக்கும் பணிகள்;
என மொத்தம் 23 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.
அதனைத் தொடர்ந்து, கொளத்தூர், எவர்வின் பள்ளி விளையாட்டுத் திடலில்
நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரமலான்
பெருநாளை முன்னிட்டு 2000 இஸ்லாமிய குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை
வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர்
.கே.என். நேரு, இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி. ஆர். கிரிராஜன்,
சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. தாயகம் கவி, திரு. அ. வெற்றியழகன், திரு. ஜோசப்
சாமுவேல், துணை மேயர் .மு. மகேஷ்குமார், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு
நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், பெருநகர சென்னை மாநகராட்சி
ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மயிலம் ஆதினம்,. ஜனாப்
ஹமீல் ஷேக் சபீர் பிலிக்ஸ் ராஜாமணி, அருட்சகோதரி அமலா ரஜினி, திரு.
பிரகாஷ் ஜெயின், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர்
அலுவலர்கள் கலந்து கொண்டனர்.