மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் சமூகவலைத்தளப் பதிவுதாம் தவறான எண்ணத்துடன் கூறவில்லை என அவரே விளக்கம்அளித்துவிட்ட பின்னரும், திரு. ராகுல் காந்தியைப் போன்ற ஒரு தலைவரை அவரதுபேச்சுக்காகத் தண்டித்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது என்பதோடு, இதுவரை நாம்பார்த்திராத ஒன்றாகும்.எதிர்க்கட்சிகளைக் குறி வைத்து வந்த பா.ஜ.க.வின் போக்கு, தற்போதுஜனநாயக உரிமைகளையே காலில் போட்டு நசுக்குவதில் வந்து முடிந்திருக்கிறது.இத்தகைய அக்கிரமங்கள் விரைவில் முடிவுக்கு வரும்.
சகோதரர் ராகுல் காந்தி அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசி, அவருக்கு எனது ஆதரவைத் தெரிவித்திருக்கிறேன். இறுதியில் நீதியே வெல்லும்என்று உறுதியாக நம்புகிறேன்.
முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவு
