பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு க் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வீ.ப.ஜெயசீலன்.,தகவல்.

பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு க் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்
நடத்தப்பட உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர்
வீ.ப.ஜெயசீலன்.,தகவல்.பள்ளி / கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும்
வளர்க்கும் நோக்கில் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் ஆண்டுதோறும் மாவட்ட வாரியாக
கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற்று வருகின்றன.
2022-23ஆம் ஆண்டுக்கான பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் வருகின்ற
சூன் திங்களிலும், , கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள்
விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சி மன்றக் கூட்ட அரங்கில் நடத்தப்பெற
உள்ளன. பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், விதிமுறைகள் குறித்து பின்னர்
அறிவிக்கப்பெறும்.
கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் அனைத்து அரசு/ தனியார் / அரசு
உதவி பெறும் கலைக் கல்லூரிகள் / பொறியியல்/ மருத்துவக் கல்லூரிகள்/
பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம்.
ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் ஒரு கல்லூரியிலிருந்து மொத்தம் 3 மாணவர்கள்
பங்கேற்கலாம். கல்லூரி மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைத் தாங்கள் பயிலும்
கல்லூரியின் முதல்வர் ஒப்பத்துடன் விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி
இயக்குநர் அலுவலகத்திற்கு நேரிலோ, அஞ்சல் முலமாகவோ, மின்னஞ்சல் –
( tamilvalar.vnr@tn.gov.in ) முலமாகவோ அனுப்பி வைக்க
வேண்டும்.
போட்டிகளின் முடிவுகள் உடனடியாக அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசுகள் வழங்கவுள்ளார்.
பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.10000/- , இரண்டாம்பரிசு ரூ.7000/- , மூன்றாம் பரிசு
ரூ.5000/- என்ற வீதத்தில் பரிசுத்தொகைகள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட
அளவிலான போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் மட்டும் மாநில அளவிலான
போட்டிகளில் கலந்து கொள்ளப் பரிந்துரை செய்யப்பெறுவர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி
இயக்குநர் ம.சுசிலாமேற்கொண்டுவருகிறார் என மாவட்ட
ஆட்சித்தலைவர்வீ.ப.ஜெயசீலன்., தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *