திரு. பி.கே.சேகர்பாபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 272-ஆவது குழுமக் கூட்டம்
மாண்புமிகு சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும்
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே.சேகர்பாபு அவர்களின்

தலைமையில் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று
(30.03.2023) சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில்
மாண்புமிகு சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து
சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில்
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 272-ஆவது குழுமக் கூட்டம் நடைபெற்றது.
இக்குழுமக் கூட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து
முனையத்தில், மாநகர பேருந்துகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள முனையத்தில்
எரிபொருள் நிரப்பும் மையம், பெருநகரப் பேருந்தின் பணிமனைக்கு அருகாமையில்
இடம் அளிப்பது சம்பந்தமாகவும், சென்னை பெருநகர எல்லைக்குள் நில உபயோக
மாற்ற விண்ணப்பங்களின் மீது பரிசளித்து முடிவுகள் எடுக்கப்பட்டன. மாண்புமிகு
அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் மீதான தொடர் நடவடிக்கைகள்
குறித்தும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் நிர்வாக நடவடிக்கைகள் குறித்தும்
முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இக்குழுமக் கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் மாண்புமிகு மேயர்
திருமதி.ஆர்.பிரியா அவர்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் திரு. பூச்சி எஸ்.
முருகன் அவர்கள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர்
செல்வி அபூர்வா இ.ஆ.ப., அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் (மாதவரம்)
திரு.எஸ்.சுதர்சனம் அவர்கள், (திரு.வி.க.நகர்) திரு.பி.சிவக்குமார் என்கிற தாயகம் கவி
அவர்கள், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் திரு.அன்சூல்
மிஸ்ரா இ.ஆ.ப., அவர்கள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய
மேலாண்மை இயக்குநர், திரு. ம. கோவிந்த ராவ், இ.ஆ.ப., அவர்கள், நகர் ஊரமைப்பு
இயக்கக இயக்குநர் திரு.பா. கணேசன், இ.ஆ.ப., அவர்கள், குழும உறுப்பினர்கள், உயர்
அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *