தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான திரு.பி.கே.சேகர்பாபு அவர்கள் சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வால்டாக்ஸ் ரோட்டில் அமைந்துள்ள பழைய நாடகக் கொட்டகையை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிதியில் புதிய திருமண மண்டபம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்கு கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி வடக்கு வட்டார துணை ஆணையாளர் திரு. எம். சிவகுரு பிரபாகரன்,இ.ஆ.ப., சி.எம்.டி.ஏ தலைமை திட்ட அலுவலர் திரு.எஸ்.ருத்ரமூர்த்தி, இராயபுரம் மண்டல அலுவலர் திரு.ஜி.தமிழ்செல்வன், செயற்பொறியாளர் திரு.லாரன்ஸ், மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
திருமண மண்டபம் அமைப்பதற்கான இடத்தினை தேர்வு செய்வதற்கு கள ஆய்வு மேற்கொண்டார்.
