தவறுதலாக சொந்த நகரிலேயே குண்டுவீசிய ரஷ்யா

மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் ஒரு ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகின்றது. இரு நாடுகளும் ஒன்றையொன்று தாக்கி வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து சுமார் 40.கி.மீ. தொலைவில் சுமார் 3லட்சத்து40ஆயிரம் பேர் வசித்து வரும் பெல்கோரோட் நகரின் மீது தினசரி உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்துவதாக ரஷ்யா ராணுவம் கூறி வருகின்றது.
இந்நிலையில் பெல்கோரோட் நகரின் மீது திடீரென குண்டு வீசப்பட்டது.

இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். குண்டு வீச்சின் காரணமாக சுமார் 20அடிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் இருந்த கட்டிடங்கள் விரிசலடைந்தன. ஜன்னல்கள், கதவுகள் சேதமடைந்தது. இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு பின் தான் பெல்கோரோட் நகர் மீது ரஷ்யாவின் விமானப்படையின் எஸ்யூ-34 தவறுதலாக குண்டு வீசியுள்ளது கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *