தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தி கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

 

சமீப காலமாக தமிழர்கள் மீதும், தமிழக கலாச்சார, பண்பாட்டின் மீதும்
நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கடுமையான
படையெடுப்பை நடத்தி வருகிறது. இதனைத் தமிழகத்தில் உள்ள ஆளுநர்
மூலமாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு
முட்டுக்கட்டை போடும் சீர்குலைவு செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதை
ஒட்டுமொத்தமாக தமிழகத்திலுள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி
கட்சிகள் எதிர்த்து போராடி வருகின்றன. இத்தகைய அரசமைப்புச் சட்டத்திற்கு
விரோதமான நடவடிக்கைகளில் இருந்து தமிழகத்தை பாதுகாக்க வேண்டிய
பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்தி வந்தாலும், தமிழகத்தில்
நடைபெறும் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி மூலம் மக்கள் பயன்பெற்று
வருகிறார்கள். ஒன்றிய பா.ஜ.க. அரசால் தமிழர்களின் உரிமைகளும்,
தன்மானமும் பறிக்கப்பட்டு வருவதை மீட்டெடுக்கவும், தமிழர்களின்
கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பாதுகாக்க வழி ஏற்படுத்தும் வகையிலும்
நமது செயல்பாடுகள் அமைய வேண்டும். இந்த சோபகிருது தமிழ்ப் புத்தாண்டில்
அனைவரது வாழ்விலும் ஏற்றம் பெற உரிய தருணம் அமைந்திருக்கிறது.
அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தமிழ்நாடு
காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *