தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023 – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023 – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று(14.03.2023) தலைமைச் செயலகத்தில், வேளாண்மை – உழவர் நலத்துறை சார்பில் உணவுப்
பாதுகாப்பை உறுதி செய்திடவும், நஞ்சற்ற இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும்வகையிலும் “தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023” (Tamil Nadu OrganicFarming Policy 2023) வெளியிட்டார்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகஇயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண்மைத் துறையில் தனியே ஒரு பிரிவுஉருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி, 2021-2022ஆம் ஆண்டிற்கான வேளாண்மை – உழவர் நலத்துறையின்
நிதிநிலை அறிக்கையில், “அதிக அளவு பயன்படுத்தப்பட்ட இரசாயன உரங்களாலும், பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள், மண்புழுக்களின் எண்ணிக்கைவெகுவாக குறைந்து மண்வளம் பாதிக்கப்பட்டதோடு சுற்றுப்புறச்சூழலும்பாதிக்கப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கக்கூடிய, இயற்கை வேளாண்விளைபொருட்களின் தேவையும் விழிப்புணர்வும் மிக அதிகமாக ஏற்பட்டுள்ளது.இவற்றைக் கருத்தில் கொண்டு, இயற்கை வேளாண்மை தொடர்பான பணிகளை சிறப்புக்கவனத்துடன் செயல்படுத்துவதற்கு, "வேளாண்மைத் துறையில் இயற்கைவேளாண்மைக்கென்று தனிப் பிரிவு" ஒன்று உருவாக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டு உரியஆணைகள் வெளியிடப்பட்டன.அதன் முதற்கட்டமாக, அங்கக வேளாண்மை வரைவுக் கொள்கையைஉருவாக்குதற்காக வேளாண்மை – உழவர் நலத் துறையின் அரசு சிறப்புச் செயலாளர்
அவர்களது தலைமையில் ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, அங்கக வேளாண்மைக்கொள்கையினை வரையறுப்பதற்காக குழுக்கூட்டங்கள் அவ்வப்போது நடைபெற்றன.அக்கூட்டங்களில், அங்கக வேளாண்மைக் கொள்கையினை வகுப்பதற்கான பல்வேறுதிட்டப் பணிகள் குறித்து, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர்,துறைத் தலைவர்கள், முன்னணி அங்கக விவசாயப் பிரிதிநிதிகள் மற்றும் அங்ககவேளாண்மை சார்ந்த அரசு சாரா நிறுவனத்தினர் ஆகியோர்களின் ஆலோசனைகள், பிறமாநிலங்களில் அங்கக வேளாண்மையில் கையாளப்பட்டுவரும் நடைமுறைகள், அதன் சாதக
பாதகங்கள் போன்றவை குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டு, அதனடிப்படையில் வரைவுஅங்கக வேளாண்மை கொள்கை, செயல்திட்டம் மற்றும் விதிமுறைகள் ஆகியனஉருவாக்கப்பட்டுள்ளன.இதன்மூலம், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவத்தை தமிழ்நாட்டுவிவசாயிகளிடையே அதிகரித்தல், நிலங்களில் இராசயன இடுபொருட்களின்பயன்பாட்டினை படிப்படியாக குறைத்து, இயற்கை இடுபொருட்களை அதிகளவில்பயன்படுத்துதல், மண் வளத்தை மேம்படுத்துதல் போன்றவற்றிற்கு தமிழ்நாடு அங்கக
வேளாண்மைக் கொள்கை வழிவகுக்கும்.இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு வேளாண்மை-உழவர்நலத்துறைஅமைச்சர்திரு.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,இ.ஆ.ப., வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் திரு.சி.சமயமூர்த்தி,இ.ஆ.ப., வேளாண்மைத் துறை இயக்குநர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., தோட்டக்கலைமற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர்டாக்டர் இரா.பிருந்தாதேவி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *