சென்னை
தீபாவளிக்கு முன் மழைநீர் வடிகால் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளேன் என அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார். பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால் பணிகள் முடிவடையும் என்கிற நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம் என சென்னை வால்டாக்ஸ் சாலையில் வடிகால் பணிகளை ஆய்வு செய்த பின் அமைச்சர் எ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார்.