தூத்துக்குடியில் கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் தூத்துக்குடி, இந்தியா முழுவதும் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.இந்நிலையில், கடந்த மாதம் 23ம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக தூத்துக்குடியை சேர்ந்தவர் உயிரிழந்து உள்ளார். தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த 54 வயதாகும் பார்த்திபன் என்பவர், உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பார்த்திபன், கடந்த 23ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், பார்த்திபன் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த சம்பவம், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக தூத்துக்குடியை சேர்ந்தவர் உயிரிழந்து உள்ளார்.
