மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர் பெரியகருப்பன்அவர்களால்சென்னை, கொத்தவால்சாவடியில் புதிய நியாயவிலைக் கடை திறப்பு
இன்று (17.03.2023) காலை 9.00 மணியளவில் சென்னை, கொத்தவால்சாவடி,தாத்தா முத்தையப்பன் தெருவில் வ.உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலையின்புதிய நியாயவிலைக் கடையினை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர்
அவர்களால் குத்துவிளக்கேற்றி துவக்கினார்.பின்னர் செய்தியாளர்களின் சந்திப்பின்போது மாண்புமிகு அமைச்சர் அவர்கள்
கூறியதாவது, தமிழ்நாட்டில் கூட்டுறவுத்துறை மக்களுக்கு முக்கிய சேவைகள் அளித்து
வருகின்றது. குறிப்பாக, அரசின் சார்பில் கூட்டுறவு நியாயவிலைக் கடைகள் மூலம்
குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தரமாகவும்,தங்குதடையின்றியும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 35,941நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 3,516 நியாயவிலைக்கடைகள்
சொந்த கட்டடங்களிலும், 24,179 நியாயவிலைக்கடைகள் வாடகை இன்றி பொதுகட்டடங்களிலும், 7,952 நியாயவிலைக் கடைகள் வாடகைகட்டடங்களிலும்செயல்பட்டு வருகிறது. இதில் வ.உ. சிதம்பரனார் கூட்டுறவு பண்டகசாலைக்குசொந்தமான நியாயவிலைக்கடை ரூ.12,000/- வீதம் வாடகை கட்டடத்தில்செயல்பட்டு வந்துள்ள நிலையில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் அவர்களின் முயற்சியாலும், பொதுமக்களின் ஒத்துழைப்போடு சென்னைமாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மாதம் ஒன்றுக்கு ரூ.2,000/- வீதம் வாடகைஅடிப்டையில் புதிய நியாயவிலைக் கடை இன்று தொடங்கப்பட்டது. மேலும்,நியாயவிலைக் கடைக்கு வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசியப்
பொருட்களை தங்கு தடையின்றி வழங்குவதற்கும், பொதுமக்கள் காத்திருக்காமல்
இருக்க முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும்,பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமின்றி மினி சூப்பர் மார்க்கெட் மூலம்தேவையான அனைத்து பொருட்களும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூட்டுறவு நியாயவிலைக் கடையில் உள்ள 6500 காலிபணியிடங்கள்நிரப்புவதற்கு நேர்முக தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு தற்போது மதிப்பீடு பணி
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தகுதியுள்ள பணியாளர்களுக்கு விரைவில் பணிஆணை வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைகூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., கூட்டுறவுச்சங்கங்களின் பதிவாளர் திரு.அ.சண்முகசுந்தரம், இ.ஆ.ப., கூடுதல் பதிவாளர்(நுகர்வோர் பணிகள்) திரு.அ.சங்கர், இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள்கலந்துக்கொண்டனர்.செய்தி வெளியீடு : துணை இயக்குநர்/மக்கள் தொடர்பு, கூட்டுறவுத்துறை
கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர் பெரியகருப்பன் நியாயவிலைக் கடை திறப்பு
