ஓபிஎஸ் தரப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் கால்பந்தை போல் அலைக்கழிக்கப்படுகின்றன என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளார். சென்னை, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஈபிஎஸ் கூட்டிய பொதுக்குழுதொண்டர்களுக்கு சம்பந்தமில்லாத போலியானது. ஓபிஎஸ் தரப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் கால்பந்தை போல் அலைக்கழிக்கப்படுகின்றன.அதிமுகவில் நிலவும் மாயை மக்கள் மன்றத்திற்கு சென்றால் தான் விலகும். சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் பிரியக்கூடாது என்பதால் ஓபிஎஸ்ஸும் டிடிவி தினகரனும் வேட்பாளர்களை வாபஸ் பெற்றனர்.ஈரோடு இடைத்தேர்தல் முடிவுக்கு எங்களுக்கு ஊக்கத்தை தருகிறது. ஓபிஎஸ் தரப்பில் வருகிற 24-ம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெறும். மாநாட்டிற்கு பிறகு மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் ஓபிஎஸ் என்றார்.