தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையும், தென்னக பண்பாட்டு மையம் இணைந்து
நடத்தவுள்ள உலக நாடக நாள் மார்ச் 27, 28 மற்றும் தேசிய கருத்தரங்கம், அரங்க
நிழ்த்துக்கலை விழாவினை முன்னிட்டு மாண்பமை துணைவேந்தரவர்கள் விழாவின்
இலட்சினையை வெளியிட கலைப்புல முதன்மையர் முனைவர் பெ.இளையாப்பிள்ளை
அவர்களும் துறைத்தலைவர் முனைவர் சி.வீரமணி அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
உடன் நாடகத்துறை கௌரவ உதவிப் பேராசிரியர்கள் முனைவர் ஏ.வெங்கடேசன்,
முனைவர் ப.ரெங்கராஜ் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இவ்வாண்டு உலக நாடக தின செய்தியாக, நாடகக்கலை வடிவமானது
காண்பவர்கள் மட்டும் அல்லாது அதனை செய்பவர்களும், அதனை சார்ந்த
நிறுவனங்களும், அரசும் இணைந்து மகிழ்வுடன் செயல்பட உதவிட வேண்டும்
என்பதே 2023 ஆண்டின் நாடக தின செய்தியின் நோக்கமாகும்.
உலக நாடக நாள் மார்ச் 27, 28 மற்றும் தேசிய கருத்தரங்கம்,
