- அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கடிதம்
- விஜய் மக்கள் இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற திட்டமா என சந்தேகம்
சென்னை: விஜய் மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகின்றது. அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மாலை அணிவிக்க விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார். விஜய் மக்கள் இயக்கத்தில் 10க்கும் மேற்பட்ட அணிகளுக்கு நிர்வாகிகளை விஜய் நியமித்துள்ளார்.
அம்பேத்கர் பிறந்தாளில் அவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாளை ஏப்ரல் 14ம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளுக்கு மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாவட்ட செயலாளர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் இந்த செய்தியை குறுஞ்செய்தி மூலம் அவர் தெரிவித்துள்ளதாகவும், தொலைபேசியின் வாயிலாக தொடர்புகொண்டு ஆலோசனையும் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது விஜய்யின் அரசியல் நகர்வாக இருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.