அதானி ஊழலின் அடையாளம் – ராகுல்காந்தி கடும் தாக்கு .

அதானி ஊழலின் அடையாளம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். பெங்களூரு, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் நரேந்திரமோடி, நீரவ் மோடி, லலித் மோடியை குறிப்பிட்டு ‘அனைத்து திருடர்களின் பெயரும் மோடி என்று முடிகிறது ஏன்? என்று கேள்வி எழுப்பினார். கர்நாடக மாநிலம் கோலாரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி அவ்வாறு பேசினார்.
இந்த பேச்சை தொடர்ந்து மோடி சமூகம் குறித்து அவதூறு ஏற்படுத்தும் என்ற வகையில் பேசியதாக கூறி ராகுல்காந்தி மீது பாஜகவை சேர்ந்த எம்.எல்.ஏவும், முன்னாள் மந்திரியுமான பூர்னேஷ் மோடி, குஜராத் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் கடந்த மாதம் 24-ம் தேதி ராகுல் காந்தியை குற்றவாளியாக அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதேவேளை, இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய ராகுல்காந்திக்கு அவகாசம் வழங்கி 30 நாட்கள் ஜாமினும் வழங்கியது. இதனை தொடர்ந்து வழக்கில் அவருக்கு ஜானின் வழங்கப்பட்டது.அவதூறு வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால் அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. அரசு பங்களாவையும் ராகுல்காந்தி காலி செய்தார். இதனிடையே, அதானிக்கு பிரதமர் மோடி உதவிகளை செய்வது குறித்து தான் பேசியதால் தான் குறிவைக்கப்பட்டுவதாக ராகுல்காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார்.இந்நிலையில், கோலாரில் மோடி சமூகம் குறித்து அவதூறு கருத்து கூறியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கிற்கு வித்தாக அமைந்த கோலாரில் ராகுல்காந்தி இன்று பேரணியில் பங்கேற்றார். கர்நாடகாவின் கோலாரில் இன்று ஜெய் பாரத் என்ற பெயரில் காங்கிரஸ் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல்காந்தி உள்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர். பேரணியில் ராகுல்காந்தி பேசுகையில், அதானி ஊழலின் அடையாளம்’ என்று கூறினார். கர்நாடகாவில் அடுத்த மாதம் 29-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குவேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *